Tuesday, June 28, 2011

நல்ல காலம் திரும்புகிறது

பூர்ணி  :    என்னம்மா..எப்பபாரு இந்த பையெல்லாம் சுத்திச் சுத்தி வீடு    
                    முழுக்க ரொப்பி வைக்கறே. எங்க பாரு ஒரே குப்பையா இருக்கு.    
                     ஒரு நா  இல்லாட்டி ஒரு நா நீ இல்லாதப்போ எல்லாத்தையும் தூக்கி                      எறியப் போறேன் பாரு

அம்மா :   நான் எனக்கு வேணும்ன்னு வச்சிருந்தா உனக்கு என்ன பண்றது.
                   (அழும் குரலில்..சண்டைக்கு தயாராக)நானும் இங்க குப்பை தான்.
                   என்னையும் எங்கயாவது கொண்டு போய் விட்டுடு.

பூர்ணி  :  ஆ..ஊன்னா இத ஒன்னச் சொல்லிடு. எப்பப்பாரு இது ஒரு ரோதன.

அக்கா  :  (இடையில்) தான் எதயோ வச்சுண்ட்டு போறா. தன்னோட எதுக்கு
                   சண்டைக்கு நிக்கறே...

(சில நாட்களுக்குப் பிறகு)

பூர்ணி  :  அம்மா...அம்மா...எனக்கு ஒரு பிளாஸ்டிக் பை இருந்தாக்க்குடு...
                  இதயெல்லாம் போட்டுண்டு போகணும்.

அம்மா :  ஹூம். இப்ப மட்டும் வந்து என்கிட்ட கேளு....எல்லாத்தயும்   
                  தூக்கிப்போடு..... போடுன்னு சொல்லிட்டு இப்ப வந்து கேளு..
      
பூர்ணி :  ஆரம்பிச்சுட்டியா. நல்ல பை-யா இருந்தா வச்சுக்கலாம், ஒரு பை
                 வேணும்ன்னு கேட்டா.. கண்ணனுக்கு ஜட்டி சுத்தி வந்த பை எல்லாம்
                 எடுத்து வச்சுண்ட்டு உசுர எடுக்கறே...சரி இதக் குடு...சின்னதெல்லாம்
                 துக்கிப்போடு. வாழப்ப்பழம் போட்டு குடுக்கற பையெல்லாம் சுத்த 
                 வேஸ்டும்மா.

அம்மா:  இல்ல குப்பை போட வச்சுப்பேன்...  கொண்டா...சிறு துரும்பும் பல்
                 குத்த உதவும்.

பூர்ணி : பல்ல குத்தி செப்டிக் ஆகாம இருந்தாச் சரி.

-----------------  **************** ----------------------

இனிமேல் அம்மா பாலித்தீன் பைகளை பொக்கிஷம் போல் பாதுகாப்பாள் என்று நினைக்கிறேன்.

ஜூலை 1ம் தேதியிலிருந்து ஹைதராபாத் கடைகளில் பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி பாலித்தீன் கவர் பயன்படுத்தும் தனி நபர் ஒருவருக்கு ரூ 500-ம், கடைகளுக்கு அவற்றின் 10 மடங்கு trading licese fee - ம் அபராதம்
விதிக்கப்படும் என்று ஹைதராபாத் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

எப்படியோ கையில் கூடையுடன் மார்க்கெட், மளிகைக்கடைகளுக்கு செல்லும் பொற்காலம் திரும்புகிறது.  அன்னை பூமி கொஞ்சம் ஆசுவாசப்படட்டும். இந்தியா முழுக்க இந்தத் தடை விரைவில் அமுல் படுத்தப்படவேண்டும்
 


No comments:

Post a Comment