Friday, January 11, 2013

யார் இந்த கதாஸ்( Kadhas)?

ஒருவேளை ஒரு நாள் வீட்டிலிருந்த புத்தக குவியல்களுகிடையே இருந்த இந்த புத்தகத்தை நான் படிக்க தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம் புத்தகத்தலைப்பாக கூட இருக்கலாம். "மெட்ராஸில் மிருது யார் இந்த கொரூச்சகா? ". அட்டைப்படமும் 60-ல் வெளி வந்த விகடன் ஜோக்குகளையும் ஒரு சமயம் துப்பறியும் சாம்பு-வினையும் நினைவுபடுத்தியது. 



அடுத்து வந்த முதல் கேள்வி, தமிழரான ஆசிரியர் ஏன் இந்தக்க கதையினை ஆங்கிலத்தில் எழுதி அப்புறம் தமிழாக்கம் செய்தார்.

முன்னுரையில் அரவிந்தன்  "இந்தப் புத்தகத்தைப் படித்தால் உங்கள் கொரூச்சகாவும் உங்கள் நினைவுக்கு வரலாம். உங்கள் குழந்தையின் மன உலகை மேலும் துல்லியமாகப் புரிந்து கொள்ள இந்தக் கதை உங்களுக்கு உதவலாம். நவீன வாழ்க்கையும் வசதிகளும் அன்னியப் படுத்தி வைத்திருக்கும் இயற்கையின் பல்வேறு கூறுகளை உங்கள் குழந்தை உணர இந்தக் கதை துணை புரியலாம் " என்பதைப் படித்த போது எனக்கு சின்ன வயதில் இருந்த நண்பன் யாரும் என் நினைவுக்கு வரவில்லை.

பெரிதாக ஒன்றும் சுவாரசியமில்லாமல் படிக்கதொடங்கிய எனக்கு பல ஆச்சரியங்கள் கொஞ்ச நேரம் சென்றவுடன் ஏற்பட்டன. இந்தப் புத்தகத்தில் மிருதுவுக்குக் கிடைத்த "கொரூச்சகா" போல நான் அதுவரையில் ஆழ்ந்து கவனித்திராத என் மகளின் நண்பன் "கதாஸ்" கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முற்பட்டான்.

ஒரு நாள் தொலைபேசியில் பேசி க்கொண்டிருந்த மகளிடம் கேட்டதற்க்கு 'கதாஸுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்" என்றாள். என் மகள் வளர வளர கதாஸும் வளர்ந்து கொண்டிருக்கிறான். அவனும், ஜூனியர்ஸும் நிலா விளையாடும் போது ஓடி வந்து சேர்ந்து கொள்கின்றனர். வர முடியாத நிலையில் அவள் கதாஸுடன் தொலை பேசியிலும் பேசுகிறாள். அவளிடம் கேட்டறிந்த கதாஸ் செய்திகள் மிகவும் வியப்பூட்டுபவை யாக இருக்கின்றன. கதாஸ் தற்சமயம் பெங்களூரில் இருப்பதாகவும்,போன டிசம்பரில் இங்கு வந்து அவளை பார்த்துவிட்டு ச்சென்றதாகவும் கூறினாள்.

சில சமயம் பெங்களூரில் இருப்பவன், திடீரென இங்கே வந்து மகளுடன்(நிலா) "கபூச்சு" விளையாடிவிட்டுச் சென்றதும் நடந்திருக்கிறது. 

நேற்று இரவு 10.30 மணிக்கு அனைவரும் தூங்கும் சமயத்தில் கண்ணனுடனும், நிலாவுடனும் கதாஸும் சேர்ந்து கொண்டு இரவு போடும் சப்தத்தை கண்டு பிடித்து (ஸ்...... ) எனக்கு காண்பித்துக்கொடுத்தனர். :)

அவர்களின் கோட்டிங் ஷோட்டி-யில் (Ghoating -Shoti) ஒரு ஸ்கூல், ஒரு ஜூனியர்ஸ் காலேஜ் அப்புறம் ஒரு ஆபீஸும் இருக்கிறது.

புத்தகத்தில்  டாப்பி, தாத்தா, அம்மணி என்ற வயதானவர்கள் மூன்று பேரும்  எப்பொழுது பார்த்தாலும் மிருதுவை ஏதாவது செய்யச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 

"மிருது [நிலா] கை அலம்பு"
"மிருது! [நிலா] வா தலை பின்னி விடறேன்'
'மிருது! [நிலா] போய்க் குளி'
"மிருது [நிலா]சாப்பிட வா"
"மிருது! [நிலா] கொஞ்ச நேரம்  தொந்தரவு பண்ணாதே"
'மிருது! [நிலா] நேரமாச்சு. போய்த் தூங்கு"

அய்யோ! இதை எல்லாவற்றையும் நானும் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வயதாகிக் கொண்டு வருகிறதா என்ன????

அப்பப்பா ...! நல்ல வேளை , இந்தத் தொல்லைக்கு நடுவில் ஒருநாள் அவளுக்கு கொரூச்சகா [ கதாஸ்] கிடைத்தான் :).

"மெட்ராஸி-ல் மிருது   யார் இந்த கொரூச்சகா?" படிக்கப் படிக்க உங்களுக்கு உங்களின் குழந்தைகளின் செயல்கள் படம் போல விரியும்.

அவர்களின் விளையாட்டு நண்பனைக் நீங்களும் சந்தித்து, அவர்கள் பெரியவர்களானதும் நினைவுகளை மீட்டுக் கொடுங்கள்.


பின்குறிப்பு: 
"மெட்ராஸி-ல் மிருது   யார் இந்த கொரூச்சகா?"  - 
தமிழாக்கம் : பிரேமா ஸ்ரீனிவாசன், வஸந்தா சூரியா
காலச்சுவடு பதிப்பகம் . விலை ரூ ; 80
 




Thursday, January 10, 2013

புத்தகக் கண்காட்சி- புத்தக லிஸ்ட்

எனக்கு எப்பவுமே ஊருக்கு செல்வதைக் காட்டிலும், செல்வதற்குரிய ஆயத்தங்களை செய்வதிலும் ஆர்வம் அதிகம். முதல் முறையாக சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடிவெடுத்த உடனேயே 15 நாட்களாக, ராப்பகலாக உட்கார்ந்து நான் தயாரித்துக்கொண்டு வரும் புத்தக லிஸ்ட்.

  1.  வாண்டுமாமா புத்தகங்கள் -பல
  • ஹோமரின் இலியத் கிரேக்க புராணக்கதைகள். - வானதி
  • அழிந்த உலகம் - (முக்கியமாக கண்ணனுக்கு) - டையனோசர் பற்றி
  • எறும்பு குடும்பத்தின் கதை - வானதி
  • சந்திரனே சாட்சி - வானதி
  1. தியோடர் பாஸ்கரன் - தாமரை பூத்த  தடாகம் 
  2. இன்னும் பிறக்காத தலைமுறைக்கான தியோடர் பாஸ்கரன்( நர்மதா) 
  3. கானுறை வேங்கை , இயற்கை பராமரிப்பும் வரலாறும் தியோடர் பாஸ்கரன்( நர்மதா)
  4. மோகமுள் – தி. ஜானகிராமன்
  5. தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு 
  6. இளைஞகர்களுக்கான புத்தர் NBTஎஸ்.பட்டாச்சாரிய – NBT 
  7. ஆலவாய், மதராச பட்டினம் - நரசய்யா
  8. ரசிகமணி கட்டுரைக்களஞ்சியம் - காவ்யா, சண்முகசுந்தரம்
  9. வாழ்வின் சில உன்னதங்கள் - விட்டல் ராவ் - நர்மதா பதிப்பகம்
  10. கம்பர் தரும் ராமாயணம் (1,2,3) -  டி.கே.சிதம்பரநாத முதலியார் - திருவரசு புத்தக நிலையம்
  11. ராகுல சாங்க்ரித்யாயன் – வோல்காவிலிருந்து கங்கை வரை  - தமிழ் புத்தகாலயம்
  12. டைட்டானிக்கும் டி.கே.சி.,யும். பூவண்ணன் , திருமலா பப்ளி கே ஷன்ஸ் 
  13. கடகடா குடுகுடு - ஜீவாரகுநாத்
  14. மல்லி - ஜீவா ரகுநாத்
  15. லயன் முத்து காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி (கிடைக்குமா)
  16. லக்கி லூக் - லயன் காமிக்ஸ்
  17. யுவான் சுவாங் - இந்தியப்பயணம் 
  18.  சித்திரக்கதைகள் - நி -ராத்லோவ் - நியூ செஞுரி புக்ஹவுஸ்-ராதுகா
  19. ஈரான் 1& 2 - விடியல் பதிப்பகம்
  20. புலிநகக்கொன்றை

பார்க்க வேண்டிய பதிப்பகங்கள்
----------------------------------------
அல்லயன்ஸ் பதிப்பகம்   370
நே ஷனல் பப்ளி கே ஷன்ஸ்
வானதி பதிப்பகம்    471,495
பழனியப்பா பிரதர்ஸ்  488
மணிமேகலை பிரசுரம்- அப்பு சாமி காமிக்ஸ் 244

இன்போமேப்ஸ் 106
நே ஷனல் புக் ட்ரஸ்ட் 253
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 367
அமர் சித்ர கதா
டிஸ்கவரி புக் பேலஸ்  - 43
விடியல் - 516
லயன் முத்து காமிக்ஸ் -  343
நர்மதா - 103
தமிழ் புத்தகாலயம் - 






மசாலா பணிகாரம் பிறந்த கதை

வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் அம்மாக்களுக்கு இருக்கும் தலைவலிகளை விடப் பெரிய தலைவலி "டப்பாவில் இன்று என்ன தருவது?". தற்பொதெல்லாம் டப்பாக்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து இரண்டு, மூன்றாகிவிட்டது. அதுவும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட குழந்தைகள் இருந்தால் திண்டாட்டம் தான். இருவருக்கும் பிடித்தது என்று ஏதோ செய்வதற்குள் இன்னொரு தடவை நாமே படித்து முடித்து விடலாம். இன்று காலை வேறே ஒன்றுமெ செய்வதற்கு நேரம் இல்லாமையால் மாவை வைத்து பணியாரம் செய்து ஒப்பேற்றலாம் என்று செய்தபோது என் பெண் அதை ஒரு உணவாகவே மதிக்காததால் தொட்டுக்கொள்ள சாம்பார் என்று ஆசை காட்டி ஒரு தக்காளி கருவேப்பிலை உப்பு,கொஞ்சம் வெந்தயப்போடி,பெருங்காயப்பொடி போட்டு கொதிக்க வைத்துக் கொடுத்தனுப்பினேன். அனுப்பியது போக கொஞ்சம் நான் சாம்பார் என்று செய்தது கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியது. 

அப்புறம் நான் சாப்பிட என்று என்ன செய்யலாம் என்று யோசித்ததில் மாவுடன் மீதமானவற்றைக் கலந்து கொத்தமல்லி ,ஒரு வெங்காயம் நறுக்கிப் போட்டு பணிகாரக் கல்லில் ஊற்றியதில் கொஞ்ச நேரத்தில் வெறும் பணிகாரம் மசாலா பணிகாரமாக ஜொலித்தது.






சில முக்கிய குறிப்புகள்

  • வீட்டில் குழந்தைகள் வசதி இல்லாதவர்கள் (:))மாவில் கலக்குவதற்க்கு தேவையானவற்றை முன்பே தயாரித்துக் கொள்ளவும்.
  • 2 நடுத்தரமான பழுத்த தக்காளி ரநறுக்கியது , சிறிது கருவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத் தூள்,மஞ்சள் தூள். பச்சை மிளகாய் 1 (சிறிதாக நறுக்கியது)
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்துக் கொண்டு மேலே கூறியவற்றைப் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். தக்காளி வெந்தவுடன் அணைத்துவிடலாம்.
  • இது தவிர செய்யும் சமயம் வீட்டில்  மீதமாக இருக்கும் எந்த வேகவைத்த காய்கறியையும் சேர்த்துக் கொள்ளலாம். 
  • வெங்காயத்தையும், கொத்தமல்லி இலையையும் சிறிதாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.
  • அடுப்பில் பணிகாரக் கல்லைப் போட்டபின் மாவுடன் பொருட்களைக் கலக்குவதற்குத் தொடங்குங்கள். மாவு தயாராகும் போது கல் தேவையான அளவு சூடாக இருக்கும். 
  • முதலில் எல்லாக் குழிகளிலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அப்புறம் மாவினை குழிகளுக்குச் சற்று உள்ளடங்கி இருக்கும் வரை மட்டும் ஊற்றவும். 
  • சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு மெல்லிய ஸ்பூனால் பணிகாரம் வெந்தவுடன் , ஸ்பூனை தண்ணீரில் முக்கிவிட்டுத் திருப்பவும். 
  • முதலில் பணிகாரம் சரியாக வராவிட்டாலும் பரவாயில்லை, திருப்பவும் எல்லாக் குழிகளிலும் எண்ணை விட்டு மாவை ஊற்றி அடுப்பை சிம்மில் வத்து விட்டு பணிகாரம் சாப்பிட ஆரம்பிக்கவும். நாம் சாப்பிட்டு முடிக்கும் சமயம் அடுப்பில் ஊற்றியது சரியான பதத்தில் இருக்கும். அப்படியே திருப்பி விடவும். :) 
  • "பணிகாரம்" வார்த்தை என் பெண் கண்டு பிடித்தது.  இதையே குழந்தைகளுக்கு காரம் தவிர்த்து செய்து கொடுக்கலாம்.
  • 'என்ன? தொட்டுக் கொள்ளவா? நானே ஏதோ உல்டா செய்து பொழப்பை ஓட்டிட்டு இருக்கேன். இதுல தொட்டுக்க வேறையா?" :) 
  • தக்காளி சாஸ், சட்னி நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். செய்து பார்த்தவர்கள் கமெண்ட்டவும்.




Friday, January 4, 2013

நான் உணர்ந்த தருணம்

சில நாட்களாகவே மனது மிகுந்த சஞ்சலத்திற்கு உட்பட்டிருந்த வேளையில், இன்று காலை சுமார் 6.40 மணி அளவிற்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. நஞ்சைப்புளியம் பட்டியிலிருந்து திரு கரிவரதராஜப் பெருமாள் அர்ச்சகர் திரு.ஸ்ரீனிவாசன் அண்ணா அவர்கள் பேசினார்கள். "அம்மா , இன்று மார்கழிப் பூரம். அப்பா அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் பூஜைக்குக் குடுப்பார்கள் இல்லையா? உங்களிடமிருந்து ஏதும் தகவல் வராத போதும் ஆசிரியர் நினைவாக பூஜை செய்து பிரசாதம் அனுப்பியுள்ளேன். பெற்றுக் கொள்ளாவும். உங்களுடைய தொலைபேசி எண் கொஞ்சம் சரியாகத் தெரியாததால், உங்கள் சகோதரிக்கு போன் செய்து இந்த எண்ணைப் பெற்றுக் கொண்டேன். உங்கல் மற்றும் சகோதரிகள் அனைவரின் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்து அனுப்பி இருக்கிறேன்" என்று சொன்னவுடன், பேசுவதற்கு நா எழாமல், கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தோடியது. ஊரைவிட்டு வெகு தொலைவில் வந்து 13 வருடம் ஆகியபோதும், இந்த நாளை நினைவில் வைத்து, அதுவும் மிகவும் முக்கியமான நிகழ்வொன்றைப்பற்றி இன்னாளில் மனத்தின் எங்கேயோ ஒரு ஓர மூலை முடுக்கில் நான் அதைரியபட்டுக் கொண்டு சஞ்சலம் அடையும் வேளையில் என் அய்யன் " நான் இருக்கிறேன் கவலைப்படாதே" என்று எல்லா தூசுகளையும் அகற்றி பிரகாசிக்க வைத்து தன்னை தானே எனக்கு காட்சியளிக்கிறான். காண்பிப்பதும், காணவைப்பதும் எல்லாம் அவன் செயலே. 
                                       



வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன், திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன், புரிசங்கம் கைகண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று
 
 <facebook-ல் போட்டிருந்த செய்தியை கொஞ்சம் விரிவாக்கியது>