Friday, July 29, 2011

பங்கு

வழியெங்கும் வார்த்தைகள் சிதறிகிடக்கின்றன
செல்கிறேன் எனக்குண்டான சிலதை மட்டும் பொறுக்கிக்கொண்டு
பங்கு பிரித்து வெகுநாளாகி விட்டது.
கடன் வாங்கி பேசவேண்டியிருக்கிறது பலசமயத்தில்.....
சும்மாயிருக்கத் தெரியவில்லை எனக்கு.
தனியே சென்றிருக்கலாம் அப்போதே.....









Friday, July 22, 2011

இங்கிலீஷ், தமிழ் மற்றும் நான்.......

எனக்கும் இந்த இங்லீஷ்க்கும் இருந்த தொடர்பெல்லாம் காம்போசிசன் நோட்டு அப்புறம் 10வது-ல இருந்த sure shot notes இதனால தான் ஒடீட்டு இருந்து. அப்புறம் ஹைதராபாத்துல இருந்த அக்கா பொண்ணு என்னாவது இங்லீஷ்ல லெட்டர் போட்டா அண்ணா(அப்பா) எழுதித் தந்தத அப்படியே காப்பி அடிச்சு மிச்சம் இருக்கற இடத்துல ரெண்டு போட்டு 2 போட்டு வாத்து, குச்சி தென்னமரம், தண்ணி மீனுன்னு ஒப்பேத்திடுவேன்.

அப்பா வேலை பார்த்த ஸ்கூல்லியே தான் நானும் படிச்சேன். எப்பாவது தான் அப்பாட்ட சொல்லிக்குடுன்னு கேப்பேன். வீட்டில் என் புடுங்கல் தாங்க முடியாம ரெண்டாவதுலயே டியுசன்க்கு போய்சேருன்னு அனுப்பிட்டாங்க. அதிசயமா ஒருநாளு எட்டாவது படிக்கும்போடு எங்க அப்பாட்ட கணக்கு சொல்லித்தான்ன்னு கேட்டு அவரு சொல்லித்தரத்துக்குள்ள , "டூ இன்ட்டூ ஃபைவ் இஸ்சீக்கொல்ட்டு" அப்படீன்ல்லாம் இங்லீஷ்ல சொல்லக்க்கூடாது , ரெண்டு பெருக்கல் அஞ்சு சமம்ன்னு தான் சொல்லனும்-னு எங்க வாத்தியார் சொல்லீருக்கார் அப்படீன்னு ஒரே போடாப் போட்டேன். எங்க அப்பா பொறுக்க முடியாம தலைல அடிச்சுக்கிட்டார். இதுல கொடுமை என்னன்னா அவரு தமிழ் எம்.ஏ .அவருகிட்டியே வாலாட்டி ,காலாட்டி, இன்னும் என்னன்னாலாமோ செஞ்சு கடைசீல நீயாச்சு உன் கணக்காச்சுன்னு ஒரு பொறுமைத்திலகத்தையே தவிக்க வெச்சுட்டேன். நம்ம தமிழ்ப்பற்று அப்பிடி. :). அடுத்த ரெண்டு வருசத்துல இது அப்பயே திரும்பி நான் எதுக்கோ இஸ்சீகொல்ட்டு ன்னு சொன்னப்போ சரியா நேரம்பாத்து சொல்லி காமிச்சுட்டார்.

ஆனா அப்போல்லாம் சும்மா ஒரு தடவை படிச்சா போதும். பரிட்சை எழுத வரை மறக்கவே மாட்டேன். இது தான் எனக்கு கை கொடுத்துச்சு.  10வதுல இங்லீஷ்ல ஸ்கூல பர்ஸ்டு வேற. அப்படீன்னா நீங்களே புரிஞ்சுக்கோங்க என் மெமரி பவர் எப்படீன்னு.

ஊர்ல சும்மா அட்டகாசமா "வாங்க்க்க்கா" "ஏனுங்க்கா கூப்ட்ருந்தீங்களா' ன்னு கலக்கலா கோயமுத்தூர் பாஷை பேசீட்டு இருந்த புள்ளை , ஹைதராபாத்துக்கு திடீர்ன்னு வந்து நின்னா என்னத்தச்செய்யும் பாவம். சன்னல் கம்பிய பிடிச்சுக்கிட்டு யாராச்சும் தமிழ்ல பேசமாட்டாங்களான்னு பார்த்துக்கிட்டே இருப்பேன். இங்க அக்கா பொண்ணுக்கு தமிழ்,இங்லீஷ்,தெலுங்கு, ஹிந்தி 4 பாஷை தெரியும். அவ ஃப்ரெண்ட்ஸ் யாராவது வந்தா பதறி அடிச்சுக்கிட்டு அக்காகிட்ட ஓடி போய்டுவேன். எனக்குன்னு பார்த்து நெறயா இங்லீஷ் பேசற ஃப்ரெண்ட்ஸ் ஆவே புடிச்சு வெச்சுருந்தா அவ .. :).

எழுதும்போது இஸ், வாஸ், மிச்சம் மீதி எல்லாம் போட்டு கோடிட்ட இடங்களை நிரப்புக ஸ்டைல்ல எப்படியோ சமாளிச்சு எழுதிவேன். அதுவும் ஓரளவுக்கு சுமாராகவே தேறிடும் (ஹி ஹி ...இப்பவும் அப்படித்தான்...). பேசறது தான் கொஞ்சம் தந்தி அடிக்கும்.

ஹைதாராபா ஆபீஸ்ல என்னத்தவிர இன்னும் 3 பேருக்கு தமிழ் தெரியும்.அதுனால எப்படியோ வண்டி ஓட ஆரம்பிச்சுது. என்கூட சேர்ந்த பசங்களும் இதே நிலமைதான். அவங்க தெலுங்கு மீடியம். ஆனா அவங்க அவங்கக்குள்ளியே தெலுங்குல பேசிப்பாங்க. ஹிந்தியும் புரியுமாருக்கும். இங்க இங்கிலீஷே நொண்டுது. வேற என்னத்த பேசறது. கொஞ்ச நாளைக்கு ரொம்ம்ப்போ அமைதியான பொண்ணா காட்சி கொடுத்துக்கிட்டு இருந்தேன்.

ஒருநாள் அக்கா பையனோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்திருந்தான் அவங்கக்குள்ளே என்னமோ பேசி சிரிச்சிட்டு இருந்தாங்க. அதைக்கேட்டுட்டு, அப்புறம் அக்காகிட்ட போய் அதை தெரிஞ்சு ரொம்பத் தெளிவா, அடுத்த நாள் ஆபீஸ் போய் என் பக்கத்துல உக்காந்துக்கிட்டு இருந்த பையன் கிட்ட போய் பட்டுன்னு கேட்டுட்டேன். அவன் அத சத்தியமா எதிர் பார்க்கலை. ("நீக்கு பிச்செக்கிந்தா? எர்ரகட்டானுஞ்சு ஒச்சாவா")"உனக்கு பைத்தியம் பிடிச்சுருக்கா? எர்ரகட்டால இருந்து வந்திருக்கியா? ன்னு நான் தெள்ளத்தெளிவா கேட்டப்பறம் அவன் என்கிட்ட பேசி விவரமெல்லாம் வாங்கீட்டு , சும்மா அந்த பக்கம் போய்ட்டு இருந்த இன்னொருத்தன கூப்ட்டு பூர்ணி எதோ கேக்கறா.  பதில் சொல்லீட்டுப் போ ன்னு அவன வசமா சிக்க வச்சுட்டான். அன்னிக்கு ஆபீஸ் முடியறதுக்குள்ள அங்க வேலை பார்த்த MD தவிர மத்த எல்லாரும் எங்கிட்ட மாட்டிக்கிட்டாங்க.

இதுக்கப்பறம் நான் தெலுங்கு கத்துக்கறதுக்கு ஆவலா இருந்தும் பசங்க விடலை. பூர்ணி நீ இங்லீஷ் பேசினாத்தான் உனக்கும் நல்லது...எங்களுக்கும் ரொம்ப நல்லதுன்னு ஆப்பு வச்சுட்டாங்க. இப்படியே எதோ தட்டுத்தடுமாறி நானும் , அவங்களும் இங்லீஷ்லயே மாட்லாடறதுக்கு கத்துக்கிட்டடோம்.

இங்க வந்து 10 வருஷம் ஆகி தெலுங்கு கத்துக்கிட்டு ,எல்லாரும் கொல்ல்ட்டீ ன்னு கிண்டல் பண்ணாலும் , எங்கியாவது  யாராவது தமிழ்ல பேசறதக்கேட்டாலே, ஓடிப்ப்போய் நல்லாருகீங்களா? எந்த ஊருன்னு கேக்கத் தோணுது. செகந்தராபாத் தாவது பரவால்லை.நெறயா தமிழ் பேசறவங்க இருக்காங்க. 5 வருஷம் முன்னாடி எங்கியோ நந்தியால் போனப்போ எனக்கு அவ்வளவு தெலுங்கும் தெரியாது. அங்க கோவிலுக்கு ஒரு தமிழ்க்குடும்பம் வந்திருந்தாங்க. எனக்கோ போய்ப் பேசணும்னு கையும் காலும் பரபரங்குது. பேசறத்துக்கும் தயக்கமாருக்கு. கூட வந்தவங்கெல்லாம் ஓட்டித்தள்ளிட்டாங்க...

இப்பவும் என் இங்லீஷ் சுமார்தான். எதெதோ இங்லீஷ் blog எல்லாம் படிச்சாலும், எழுதணும்னா கொஞ்ச தயக்கம் தான். சமீபத்துல ரொம்ப தெரிஞ்ச சிலபேர்  இங்லீஷ் blog எல்லாம் பார்த்தேன். எல்லாருமே நல்லாத்தான் எழுதறாங்க. எனக்கு என்னமோ இங்லீஷ்ல எழுதரதெல்லாம் டெக்னிகல் தான் ன்னு ஒரு பிரமை. ஒரு 4 வருஷத்துக்கு மேலாவே அம்பி, டுபுக்கு, கானாபிரபா, அபிஅப்பா,-ல இருந்து இப்போ தக்குடு, அப்பாவி தங்கமணி ன்னு லிஸ்ட் ஏறிகிட்டே போகுது. எத்தன எத்தனயோ பேர் பிளாகெல்லாம் படிக்கப்படிக்க தா நானும் ஏதோ எழுதி வைக்கணும்னு எனக்குள்ள இருந்த எலிக்குட்டி பிராண்டிட்டே இருக்குது.

பின்குறிப்பு : நான் ஏன் தமிழ் வலைப்பூ தொடங்கினேன்னு என்னாமா பில்ட் அப் குடுத்துருக்கேன் பார்த்தீங்களா !!!!.:) :) :).