என் அப்பா அடிக்கடி ஒரு ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருப்பார். அப்போ எனக்கு ஒன்றும் பெரிதாகப் புரியவில்லை.
அது என்னமோ 3 வரங்கள் தான். உடனே வரக்கூடிய மரணத்தையும், எனக்கு ஒன்று தருவாயா என்று எப்போதும் யாரிடத்தும் யாசிக்காத நிலையையும், உன்னிடத்தில் நிலையான, சஞ்சலமில்லாத பக்தியையும் கொடு என்று அவர் எப்போதும் வேண்டிக்கொண்டிருந்தார்.
யோசித்துப் பார்த்தால் இங்கு உள்ள வாழ்க்கை முழுவதுமே இந்த மூன்றிடத்தில் அடங்கி விட்ட்டது என்றே தோன்றுகிறது.
இவை கிடைத்தால் இங்கு இருக்கும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று யோசிப்பதற்கு கொஞ்சமேனும் தெளிவு கிடக்கிறது.
அவருக்கும் இந்த மூன்றுமே இறையருளால் கிடைத்தது.
இருக்கும் வரை தான் இறைவழியில் தளராத சந்தேகமில்லாத பக்தியுடனும், மற்றவரிடத்தில் சென்று ஒன்று கேட்பதற்கு இல்லாத நிலையில் தான் இருந்தார்ர். செல்லும் நேரம் வந்தவுடன் மற்றவருக்கும்,தனக்கும் பெருந்துன்பம் இல்லாதவகையிலே திடீரென புறப்பட்டு விட்டார்.
உலகில் உள்ள எல்லா சமூகங்களின் நம்பிக்கை போலவே உலகத்தில் கொடுப்பதும் பெறுவதுமான சமநிலை அடிப்படையாகவே இயங்கி வருகிறது. அதில் எது மாறினாலும் எல்லாவற்றின் இயல்பும் மாறிவிடுகிறது.
நானும் இப்போதிருந்து இதையே கேட்கத்தொடங்குகிறேன்.
அனாயாசேன மரணம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வை பக்திம் அசஞ்சலாம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வை பக்திம் அசஞ்சலாம்