Thursday, October 4, 2012

ஜெயமோகன் கட்டுரைகள்:ஒரு வாசித்தலுக்கு அப்பால்

தலைப்பைப் பார்த்தவுடன் யாரும் இது தீவிரமான இலக்கிய விமரிசனமாக இருக்குமோ என்று பயப்பட்டு விடவேண்டாம். ஜெயமோகன் நாவல்களைவிட அவரது சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. பல வருடங்களாகவே அவரது கட்டுரைகளின் விசிறி நான். அவரது குழந்தைகள் அஜிதனும்,சைதன்யாவும் எனக்குள்ளும் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என ஒரு குரல் எனக்குள் எப்போது ஒலித்துக்கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் அவர் பெண் குழந்தையை பற்றி எழுதியதில், எல்லா தகப்பனும் எதோ ஒருகணத்தில் தனது பெண் குழந்தையை ஆராதிக்கும் கணத்தை உணர்வார்கள்.(கட்டுரை பெயர் நினைவில்லை.தேட வேண்டும்). இப்போது நிலாவும் கண்ணனும் பேசுவது எனக்கு அடிக்கடி இவர் குழந்தைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளையே நினைவூட்டுகிறது. துள்ளல் நடையில் எள்ளல் கலந்து எழுதிய பல நகைச்சுவைக்கட்டுரைகளை அலுவலகத்தில் படித்து, அடக்கமுடியாமல் சிரித்து விட்டு நண்பர்களில் கேள்விக் கணைகளுக்கும் பதி சொல்லமுடியாமல் தவித்திருக்கிறேன் நான். கடுமையான மனச்சோர்வு எற்ப்படும் போது இவரது நகைச்சுவை கட்டுரைகளைப் படித்தால், கவலைகளை எல்லாம் "லே மக்கா, விடுடா.அதெல்லாம் தூக்கிப்போடுடே" என்று சிரித்துக்கொண்டு வேறு வேலையை பார்க்கும் அளவிற்கு ஒரு சின்ன உற்சாகத்தைக் காண்கிறேன் என்னிடம் , அது தற்காலிகமாக இருந்தாலும் அது போது எனக்கு.

No comments:

Post a Comment