நாம புதுசா பொறந்த குழந்தைய பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போனா என்ன செய்வோம்?. பாப்பா அம்மா மாதிரி இருக்கு, அப்பா மாதிரி இருக்குன்னு ஆளாளுக்கு ஒன்னு சொல்லுவோம். கொஞ்சம் பெரியவங்களா இருந்தா ஒடனே காது மடலைப் பார்த்துட்டு பையன் கொஞ்சம் மாநெறமாத்தான் வருவான் அப்படீம்பாங்க!!!
ஆனா ஒரு அக்கா (2 1/2 வயது) தன் தம்பிய பார்த்துட்டு எப்டி வர்ணிக்கறா பாருங்க...- தம்பி சூப்பரா இருக்கான்.
- குட்டியூண்டு கை நன்னாருக்கு
- முடி நன்னாருக்கு
- கொஞ்சூண்டு முடி இருக்கு
பொக்கை நன்னாருக்கு.பல்லு வேண்டாம் அப்படீங்கறா :)
அவன் டையப்பர் கட்டாத போது பார்த்துட்டு, இதென்ன இப்பிடி இருக்குன்னு கடைசீயா ஒரு கேள்வி வேற கேட்டா. :-) (எல்லாத்தையும் கேள்வி கேட்டு பழகணும்ன்னு அவிங்க அப்பா சொல்லி குடுத்திருக்காராம்)அவளுக்கு எல்லாமே ஆச்சரியமா இருக்கு....
அவளுக்காகவே ஒரு கவித...பின்குறிப்பு: சரி சரி.....கவிதையின்னு தெரியாம சொல்லீட்டம்பா... மன்னிச்சுக்கங்க....பட்டாணியும், பொட்டுக்கடலையும் நான் அவங்களுக்கு வச்சுருக்கற செல்லபேர்...ஒரு பட்டாணியே
பொட்டுக்கடலையை பார்த்து
வியக்கிறதே (ஆச்சர்யக்குறி) !!!
No comments:
Post a Comment