ராகம் : நாட்டை
பல்லவி
முத்து மீனாட்சியே - தாயே
முத்தமிழாலே இப்புவி ஆண்ட (முத்து)
அனுபல்லவி
சக்தியே இளம் பிறைதனைச் சூடிடும்
பித்தனில் பாதியே என்றனின் தாயே (முத்து)
சரணம்
பாண்டிய மன்னரின் பைந்தமிழ் கொடியே
பார்வதியே சிவக்களிறதன் பிடியே
வேண்டிய அன்பன் என் உளம்தனில் குடியே
கொண்டு நீ என்றனை வாழ்த்திடுவாயே (முத்து)
No comments:
Post a Comment