தீர்க்க முடியாத கஷ்டத்தில் ஒருவர் மாட்டிக்கொண்டு அல்லல் படும்போது, நல்மனம் படைத்த நண்பர் வந்து தக்க நேரத்தில் உதவினால், அவர் நல்ல சமயத்தில் வந்து கை கொடுத்து காப்பாற்றினார் என்று சொல்கிறோம். அது போன்று மனம் சோர்ந்து உற்சாகமிழக்கும் சமயங்களில், நம்மை கை தூக்கி கரையேற்றுபர் அழகிய சிங்கர். அப்பா என்னை கை தூக்கி விடு என்று நொடிப்பொழுதில் நினைத்தாலும், உள்ளேன் என்று உடனடியாக உணர்த்துபவர்
என் அப்பா சொல்லிக்கொடுத்த இந்த ஸ்தோத்திரத்தை என்று சொன்னாலும், மனதில் தைரியம் பிறக்கிறது.
ஏகேன சக்ரமபரேண கரேண ஸங்க-
மன்யேன ஸிந்து-தனயாமவலம்ப்ய திஷ்டன்
வாமேதரேண வரதாபய-பத்ம-சிஹ்னம்
லக்ஷ்மீ-ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
ஒரு கையில் சுதர்சன சக்கரத்தையும், மறு கையில் சங்கையும், அருகில் தாயாரை அணைத்துக் கொண்டும், என்னாளும் அபயம் அளித்து வரமருளும் தாமரையை ஒத்த கையையும் உடைய லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் எனக்கு கை கொடுத்து அருள வேண்டும்.
திரு முக்கூர் லக்ஷ்மி நரசிம்ஹாசாரியார் எழுதிய "குறை ஒன்றுமில்லை"-ல் எங்கும் நரசிம்ம பிரவாகம். பிரபாவமே. மட்டபல்லி நாதனை தரிசிப்பது என்னாளோ?
மாதவிப்பந்தலில் உள்ளஅட்டகாசமான பதிவு
http://madhavipanthal.blogspot.com/2009/05/blog-post.html
No comments:
Post a Comment